வகுப்பு: மூன்று
பாடம்: சூழ்நிலையியல்
விலங்குகள் பற்றிய புதிர்கள்
நோக்கம்: நம்மைச்சுற்றியுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் , விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இவற்றை உற்றுநோக்குதல் அவற்றின் சிந்தித்தல் திறனைத் தூண்டுதல்
கீழ்க்கண்ட புதிர்களுக்கு விடை சொல்லத் தூண்டுதல்
1 |
புல்லை விரும்பிச் சாப்பிடும் இரண்டு சிறிய கொம்புகள் உண்டு. சிறிய வால் உடையது. விடை: ஆடு
|
2 |
மழைநீரைக்கண்டால் ஆனந்தம் பாம்புக்குப் பிடித்த உணவு விடை: தவளை
|
3 |
தன் ஓட்டுக்குள்ளே ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளும். மெதுவாக நகரும். விடை: ஆமை
|
4 |
அதன் நிறம் கருப்பு சேற்றுத் தண்ணீரிலே இருப்பது பிடிக்கும் வளைந்த கொம்புகள் உடையது விடை: எருமை
|
5 |
பழங்களைக் கொறித்துத் தின்னும் அழகான வாலுண்டு மரத்தில் வாழும் விடை: அணில்
|
6 |
நெருங்கிய தொடர்புண்டு நீண்ட வாலுண்டு. மரத்துக்கு மரம் தாவும் . விடை: குரங்கு
|
7 |
காலால் உதைப்பேன் என் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்பார்கள் பொதி சுமக்கப் பயன்படுவேன் விடை: கழுதை
|
8 |
பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் தேனைத்தேடி பூவை நாடி பறந்து செல்லும் விடை: வண்ணத்துப்பூச்சி
|
9 |
சங்கீதம் பாடி அனைவரையும் கவர்ந்திழுக்கும் பறவை விடை: குயில்
|
10 |
ஆனால் முனிவர் அல்ல நீண்ட அலகு உடையது அதன் நிறமோ வெண்மை விடை: கொக்கு
|
11 |
பூச்சி வகையைச் சேர்ந்தது தமிழ் உயிரெழுத்துக்களில் ஓர் எழுத்தைக் குறிக்கும் விடை: ஈ
|
12 |
ஆபத்து காலத்தில் வாலை துண்டிக்கும் சுவரைக் கண்டால் ஊர்ந்து சென்று ஒட்டிக்கொள்ளும். விடை: பல்லி
|
13 |
கண்கட்டி விட்டு நேராகப் பார்த்து செல்லும் வேகத்துக்கு சொந்தக்காரர் விடை: குதிரை
|
14 |
கூரைக்கு சொந்தம் கொண்டாடும் காலையில் கடிகாரத்துக்கு பதிலாக ஆளை எழுப்பப் பயன்படும். விடை: சேவல்
|
15 |
என் நிறத்தை மாற்றிக் கொள்வேன் விடை: பச்சோந்தி
|
16 |
திருடர்களைத் தேடி கவ்விப்பிடிப்பேன் என்னிடம் ஜாக்கிரதையாக இருக்கனும் மோப்பசக்தி அதிகம் உடையவன் விடை: நாய்
|
17 |
உதைத்தாலும் என் உடம்பில் இருந்து வரும் இரத்தம் நிறமற்றது நான் வீட்டிலும் இருப்பேன் நான் ஒரு பூச்சி வகையைச் சேர்ந்தவன் தரையில் ஓடுவேன் சில நேரங்களில் பறப்பேன். விடை: கரப்பான் பூச்சி
|
18 |
வீட்டிலும் இருப்பேன் என்னை அடிக்கமாட்டார்கள் ஆனால், துரத்திவிடுவார்கள் விடை: எலி
|
19 |
தூண்கள் போன்ற கால்கள் உடையவன் முறம்போன்ற காதுகள் உடையவன் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு இவன்தான் விடை: யானை
|
20 |
சுறுசுறுப்பாய் இருப்பவன் உழைப்புக்குப் பேர்போனவன் விடை: எறும்பு
|
21 |
தட்டையான அலகு உடையவன் இரண்டு கால்களிலும் சவ்வு உடையவன் இவனைக் கழுத்தைப் பிடித்து தூக்குவார்கள் விடை: வாத்து
|
22 |
துடுப்பைப் பயன்படுத்தி நீந்துவான் நீர்நிலைகளில் இருப்பான் விடை: மீன் |
இதுபோன்ற புதிர்களை மாணவர்களிடம் கேட்கும்போது அவர்களுக்குள் உற்சாகம் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் புதிர்களுக்கான விடையை முதல் குழு அல்லது இரண்டாவது குழு மூன்றாவது குழுவில் அறிகிறார்களா என்பதையும் நாம்அறியமுடிகிறது. மாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் அமைகிறது. வகுப்பறையை உற்சாகப் படுத்தும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது. மேலும் குழு செயல்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஒரு குழு கேள்வி கேட்க மற்றொரு குழு பதில் சொல்வதற்கும் இந்த செயல்பாடு பயன்படுகிறது.
Term: Term 1
- Log in or register to post comments