மூன்றாம் வகுப்பு
பாடம் 2 - கண்ணன் செய்த உதவி (TA5118)
பாடத்திற்கான நோக்கங்களான பாடத்தை அணுகும்முறை, பாடக்கருத்தான உதவி செய்வதன் முக்கியத்துவம், பாடத்திற்குத் தொடர்புடைய செயல்பாடுகள், இரண்டு சுவாரசியமான விளையாட்டுகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. உதவி செய்வது சம்பந்தப்பட்ட ஸ்டோரிவீவரின் கதைகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
செயல்பாடு: 1
உதவி:
ஒவ்வொரு மாணவரும் தன் வீட்டில் மற்றும் தன்னைச் சுற்றி உள்ளவர்க்கு எவ்வாறு உதவி செய்கிறார் என்பதை வகுப்பறையில் பகிர்தல் மற்றும் அனைத்து மாணவர்கள் எழுதியதையும் புத்தகமாகத் தொகுத்தல்.
செயல்பாடு : 2
உதவி மரம் :
வகுப்பில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருப்பின் மாணவர் செய்த உதவியை ஒரு சிறு தாளில் எழுதச் செய்து அதை உதவி மரம் ஒன்றை உருவாக்கி அதில் இணைக்கச் செய்தல்.
செயல்பாடு : 3
சாலை விதிகளை ஒரு சிறு விளையாட்டின் மூலம் கற்றல்
நில்
கவனி
செல்
செயல்பாடு : 4
அவசரகால வாகனங்கள் குறித்து உஷார் என்ற ஒரு சிறு விளையாட்டின் மூலம் கற்றல். இதன் மூலமாக மாணவர்களிடையே உஷார்நிலை மற்றும் சொற்களஞ்சியம் பெருகுதல்.
உதவி செய்தல் பற்றிய கதைகள்: (TA5119)
https://storyweaver.org.in/stories/976-ennal-udhava-mudiyum
https://storyweaver.org.in/stories/62926-enga-veetu-pasu
https://storyweaver.org.in/stories/79226-utkarnthe-ulagam-sutra
பாடம் 4 கல்யாணமாம் கல்யாணம் (TA5120)
‘கல்யாணமாம் கல்யாணம்.’ நாட்டுப்புறப் பாடலுக்கு இணையான காகம்,யானை, இளநீர் மற்றும் சிறுவர்க்கான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Term: Term 1
Request Printed Copy
- Log in or register to post comments